இலங்கையை அச்சுறுத்தும் கொடூர நபர் – விஷம் வைத்து கொலை செய்த மனைவி

கொலை, கொள்ளை, பாரிய ஹேரோயின் விற்பனை உட்பட கொடூர குற்றச் செயல்கள் பலவற்றிற்கு தொடர்புடைய பாதாள உலக குழு தலைவர் அங்கொட லொக்கா இந்தியாயவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது இரகசிய மனைவியினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இரகசிய மனைவி விஷம் கொடுத்து அங்கொட லொக்காவை கொலை செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோயம்புத்தூர் பகுதியில் கடந்த 3ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூதவுடலும் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதாள உலக குழு தலைவர் ரணாலே சமயங் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 8 பேரை களுத்துறை சிறைச்சாலை பேருந்தி வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் அங்கொட லொக்காவினால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக அங்கொட லொக்கா தனது நெருக்கமானவர்களுடன் சிலாபம் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.