வனிதாவை அசிங்கமாக விமர்சித்த சூர்யா தேவி கைது

பிரபல திரைப்பட நடிகையான வனிதாவின் திருமண விவகாரம் பெரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து பேசி வந்த பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா அதன் பின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக குழந்தைகளுடன் வாழ்க்கை, கணவர்களுடன் விவாகரத்து என்று இருந்த வந்த வனிதா பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமானார்.

அதன் பின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதால், தனக்கென்று ஒரு யூ டியூப் சேனல், அதில் தன்னுடைய சமையல் வீடியோக்களை பதிவிட்டு, அடுத்தடுத்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.


இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், பீட்டர் பால் என்பவரை வனிதா சமீபத்தில் திருமணம் செய்தார். அது அப்படியே மீண்டும் இவரின் வாழ்க்கையில் சர்ச்சையை உருவாக்கியது.

ஏனெனில் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்து கொண்டதால், இது பெரும் பிரச்சனை ஆனது.

இதில் பீட்டர் பாலின் மனைவிக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இதில் சமூகவலைத்தளமான யூ டியூப்பில் சூர்யா தேவி என்கிற பெண், வனிதாவை மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும், திட்டி வந்தார்.

இதனால் வனிதா அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா தேவி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் வனிதா-பீட்டர் பாலின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து பேசியதன் விளைவாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட இணையவாசிகள் இது எல்லாம் தேவையா? தேவையில்லாமல் பேசினால் இது தான் கதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.