யாழில் பொலிஸ் மீது வாள்வெட்டு!!

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும், பொலிஸ் உத்தியோகத்தரொருவர் யாழ். நாரந்தனை பகுதியில் வைத்து இன்று காலை வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.