அரசுடைமையாக்கப்பட்டது ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68 கோடி ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளது.

இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.