எப்படி தப்பினார் கொரோனா நோயாளி -சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே குறித்த நபர் தப்பிச் சென்ற பாதைகள், இடங்கள் குறித்து சிசிரிவி காணொளி உதவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த வாட்டிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த நோயாளி தான் சிகிச்சை பெற்ற அறையில் இருந்த தும்பு தடியை தான் அணிந்திருந்த ஆடையில் சுற்றி நோயாளி ஒருவர் கட்டிலில் படித்திருப்பதை போன்று வைத்துள்ளார்.

பின்னர் அறையில் ஜன்னல் ஒன்றை அகற்றி அதனூடாக வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தப்பி சென்ற நோயாளி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் IDH வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.