நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள், மீண்டும் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு பேசிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களிடம் பேசியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை கடந்த மாதம் 14ம் திகதியிலிருந்து வெளிநாட்டில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.