வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். இணுவில், இணுவில் கந்தசுவாமி கோவில், துரை வீதி, பாலாவோடை, மருதனார்மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, மருதனார்மடம் சந்தியிலிருந்து கொக்குவில் செம்பியன் லேன் வரை, உப்புமடம் சந்தி, உப்புமடம் சந்தியிலிருந்து கோண்டாவில் புகையிரத நிலையம் வரை, முத்தட்டுமடம் வீதி, தாவடி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், தாவடி விஜிதா மில் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.