திருமணமான 5 மாதத்தில் காணாமல் சென்ற மனைவி… பின்பு நடந்த அதிர்ச்சியால் பலியான கணவர்!

காதல் திருமணம் செய்து, 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன், தனது காதலனை திருமணம் செய்து கொண்டதால், கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜக்தேவ் என்பவரின் மனைவி ஆர்த்தி, கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அதன் பின்னர் ஜக்தேவ் பொலிஸாரிடத்தில் தனது மனைவி காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஆர்த்தி, அண்மையில் தான் தனது காதலரையே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலை அறிந்த ஜக்தேவ், அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்து, வீட்டிலேயே நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் நேற்று காலை ஜக்தேவ் வீட்டுக்கு அவரது மாமா ராமு வந்து பார்த்துள்ளார். அப்போது ஜக்தேவ் சடலமாக கிடந்ததை பார்த்ததும் அதிர்ந்துள்ளார்.

பின்பு தகவலறிந்து, அங்கு வந்த பொலிஸார் ஜக்தேவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துள்ளனர்.