கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

சென்னையில் கணவரை விட்டு வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால், இறுதியில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடமாடியுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். வாடகை கார் ஓட்டி வரும் இவருக்கும், பவானி என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மனைவி பொலிசாருக்கு தெரிவித்த நிலையில், பொலிசார் தரணிதரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிசோதனை முடிந்த நிலையில், தரணிதரன் கழுத்து இறுக்கப்பட்டு இறந்தது தெரியவந்த நிலையில் பொலிசர் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.

பின்பு அவரது மனைவியின் மொபைல் போனை சோதனை செய்த பொலிசார், வேறொரு நபருக்கு அதிகநேரம் பேசியதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அவர் வீட்டிற்கு வந்துசென்றதும் தெரியவந்துள்ளது.

பின்பு, நடத்திய விசாரணையில் அவர் தான் பழகிய நபரோடு சேர்ந்து கணவரை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

ஆம் பூந்தமல்லியில் திருமால் நகரைச் சேர்ந்த தரணிதரனின் நண்பரான தினேஷ். டிரைவர் வேலை செய்து வரும் இவரும், தரணிதரனுடன் மதுவருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் தரணிதரன் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடையில் கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் கடந்த 21ம் திகதி பூச்சி மருந்தினை சாப்பாட்டில் கலந்து கொடுத்ததும், ஆனால் காலையில் தரணதரன் வாந்தி எடுத்துள்ளார். பூச்சி மருந்து கொடுத்தும் சாகாத தகவலை தினேஷிடம் பவானி கூறிய நிலையில், அவர் வீட்டிற்கு வந்து துப்பட்டாவால் தரணதரனை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இருவரின் முன்பு துடிக்க துடிக்க மரணித்துள்ள தரணிதரன், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடகமாடியுள்ளதும் தெரியவந்துள்ளது.