ஜனாதிபதி கோட்டபாயவை நெகிழ வைத்த இஸ்லாமிய சிறுமி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியை ஓவியமாக வரைந்த சிறுவன் அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி சென்றிருந்த போது, இஸ்லாமிய சிறுமி ஒருவர் ஜனாதிபதியை ஓவியமாக வரைந்து படத்தை வழங்கியிருந்தார்.

அதனை மகிழ்ச்சியடன் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த சிறுமியுடனும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.

சிறுவர்களின் புகைப்படங்களையும் ஜனாதிபதி தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.