வெளிநாடொன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஜோர்தானில் தொழில் வாய்ப்புக்காக சென்ற இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்நாட்டு படையினர் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் வேலை வாய்ப்பின இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தங்களை இலங்கைக்கு திருப்பிஅனுப்புமாறு கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் மீதே பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைபிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.