தனிமையில் விளையாடிய இலங்கைச் சிறுமிக்கு இந்தியாவில் நடந்த விபரீதம்

இந்தியாவில் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை போஸ்கோ சட்டத்தின்படி ராமேஸ்வரம் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தரம் 6இல் கல்வி பயிலும் சிறுமிக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.

குறித்த சிறுமி பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டருகே தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மண்டபம் சமத்துவ புரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சரவணன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.