விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டவருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அந்த அதிகாரி பழகிய ஹிங்குரான முவன்கொல பகுதியில் பலரை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரசாத் விஜேலத் தெரிவித்துள்ளார்.

அந்த நபர்களுக்கு இன்றைய தினம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அந்த பிரதேசத்தில் இதுவரையில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவரும் அடையாளம் காணப்படாமையினால் அந்த பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானமில்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல அரசியல் கூட்டங்களை நிறுத்துவதற்கு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.