சஜித்தை கைகழுவி மகிந்த,ரணில் அணியில் சங்கமிக்கவுள்ள அந்த ஐவர் யார்?

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைவதற்கு ஐவர் முயன்று வருவதாகவும் இதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மேலும் சிலர் மீளவும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்திருப்பதோடு பெண் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் மீதான சேறுபூசல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.