கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்

மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஜெயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளார்.

கணவர் சுந்தர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும், மனைவி அருள்செல்வி தனியார் பள்ளியில் டீச்சராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. சம்பவத்தன்று சுந்தர் திடீரென கட்டிலில் இருந்து மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உறுப்பில் ரத்தம் இருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்பு பொலிசாரின் விசாரணையில், தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். சுந்தர் மது போதையில் வந்து ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், சம்பவத்தன்றும் மகள் முன்பு தன்னுடன் இருப்பதற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் வெறுப்படைந்து கணவரை கொன்று விட முடிவு செய்ததாக ஆசிரியை அருட்செல்வம், இதற்காக தன்னுடைய சித்தி பாலாமணி, அவரது மகன் சுதேர் ஆகியோரை வரவழைத்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிசார் தற்போது அருட்செல்வம், பாலாமணி, சுதேர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.