நாளையதினம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரம்

நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதமேந்திய இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.