யாழ் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ் (வயது 23 ) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வியே இளைஞரின் மரணத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மரண விசாரணைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.