பிரான்ஸ் நாட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு பெரும் துயரத்தில் குடும்பம் பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராடச் சென்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இந்த துயர சம்பவத்தில் இரஞ்சன் அனித்திரா (வயது19) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
கடந்த திங்கட்கிழமை தனது சக பல்கலைக்கழக நண்பிகளுடன் கடலில் நீராடச்சென்றவேளையே நீரி மூழ்கி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அந்த நாட்டில் பல்கலைக்கழகத்தில் புதுமுகம் மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் 5 சக மாணவிகளுடன் கடலில் நீராடச் சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்று தப்பியுள்ளனர் இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை பூர்வீகமாகக் கொண்டரஞ்சன் அனிதா வயது 19 என்ற மாணவியை உயிரிழந்தவரின் உயிரிழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.