திருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்

கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேட்பாளர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.