கனடாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு இளைஞன்!

கனடாவில் வசித்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவதினம் குறித்த நபர் எரிபொருள் நிலையத்துக்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் அவர் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.