ரத்தவெள்ளத்தில் பால்கனியில் கிடந்த 12 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் 12 வயது சிறுமி கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு டெல்லியில், பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா இவர்களுடன் வசித்து வருகின்றார் 12 வயது சிறுமி.. சிறுமியின் அக்கா மற்றும் பெற்றோர் கூலி வேலைக்கு செய்து வந்துள்ளனர்.

கடந்த 4ம் திகதி அனைவரும் வேலைக்கு சென்றதால், மாலை 5 மணியளவில் தனியாக இருந்த சிறுமியை சில மர்மநபர்கள் உள்ளே நுழைந்து வன்புணர்வில் ஈடுபடுத்தியுள்ளனர்

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று அவதானித்த போது, ரத்தவெள்ளத்தில் பால்கனியில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

உடனேன அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கும் வேளையில், பொலிசார் கண்காணிப்பு கமெராவை ஆராய்ந்து வருகின்றனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். 5,6 முறை கூர்மையான பொருளை வைத்து தாக்கப்பட்டுள்ளதால் சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமியின் பிறப்புறுப்பில் கத்தரிக்கோலால் கூத்தப்பட்டுள்ளதால், பிறப்புறுப்பு மற்றும் குடல்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் கிருஷ்ணா(33) என்ற நபரைக் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் போதைக்கு அடிமையானர் என்றும், இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுமியை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்ததோடு, அந்த குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார்.