நீர்வேலி கந்தன் தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று 28.04.2018 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை முதல் இடம்பெற்ற பசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகர், உமாமகேசுவரர், ஆறுமுகசுவாமி ஆகிய மூர்த்தங்கள் தனித்தனியே தத்தமது தேரிற்கு எழுந்தருளினர். விநாயகர் மற்றும் உமாமகேசுவரர் தேர்களைப் பெண் அடியவர்களும் ஆறுமுகசுவாமிக்குரிய தேரை ஆண் அடியவர்களும் இழுத்தனர். 10 மணிக்கு தேர் இருப்பிற்கு வந்தது. தேர்த்திருவிழாவின் போது அடியவர்கள் பலர் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டும் அடியழித்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.