காமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான திரு. காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும் கடமையாற்றிய திரு. காமினி செனரத், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான திரு. காமினி செனரத் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத்தில் பட்டப்பின்படிப்பு பட்டத்தை பெற்றுள்ள அவர், பல்வேறு வெளிநாட்டு கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.