திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த அம்மன் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து கடந்த 14 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , இன்றைய தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது.