முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஒரு புதிய அமைச்சை உருவாக்குவது குறித்து அரசாங்கம் யோசித்து வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் பின்னர் இந்த புதிய அமைச்சு வழங்கப்பட உள்ளது.
அமைச்சரவை அமைச்சரை விட இந்த அமைச்சு உயர்ந்த மட்டத்தில் இருக்கும் என கருதப்படுகிறது.
பொலனறுவை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிக விருப்ப வாக்குளை மாவட்டத்தில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






