மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாணசபை சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய அமைச்சரவை நாளை முதலாவது முறையாக ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.