நல்லுார் தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கலியை அறுக்கையில் சிக்கிய தம்பதிகள்

யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவனும், மனைவியும் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் இறுதி நாளான தீர்த்த திருவிழா இன்று நடைபெற்றது.

இதன்போது பக்தர்கள் மீது தீர்த்த நீர் பாய்ச்சப்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்தி வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான இருவரும் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் உற்சபகாலத்தில் கோவில்களில் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.