இலங்கையில் பாவனைக்கு உதவாத முகப்பூச்சு, உடற்பூச்சு போன்ற அழகு சாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் நேற்றைய தினம் புத்தளம் நகரில் வைத்து புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த அழகு சாதன பொருட்கள் எந்தவொரு பொறுப்புணர்வும் இன்றி, உற்பத்தி செய்யப்படவோ அல்லது விநியோகிக்கவோ முடியாத, புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் அடங்கியதாக காணப்பட்டுள்ளன.
குறித்த அழகு சாதன பொருட்கள் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆயிரத்துக்கும் அதிகமான முகப்பூச்சு மற்றும் தோல்களுக்கு பூசும் லோஷன்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கையில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.