இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…! 05 பேர் பலி

கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புறிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.