விண்வெளி மனிதர்களுடன் உறவு கொண்டு பிறந்த விசித்திர மனிதர்கள்!! இரட்டை விரல்களுடன் வாழும் விசித்திரக் கிராமம்!!

உலகில் வாழும் மக்களில் தங்கள குணாதிசயங்களை பொறுத்து விசித்திரமான மனிதர்களாக கருதப்படுவார்கள்.என்னதான் நவீனமயத்தை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருந்தாலும், ஒரு சில மக்கள் அதுபற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் தங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என கருதி ஆதி மனித வாழ்கையையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்படி, 200 ஆண்டுகளாக இருப்பவர்கள் தான் ஜிம்பாவேயில் உள்ள வடோமா என்ற பழங்குடியின மக்கள். இவர்கள் Ostrich people என அழைக்கப்படுகிறார்கள்.

அதற்கு காரணம் இவர்கள் அனைவருக்கும் காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. Ostrich பறவையின் கால்கள் இப்படி இருப்பதால், இவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.இந்த இன மக்கள் பெரும்பாலும் மக்கள் கூட்டத்தை விட்டு விலகியே வாழ்கின்றனர்.

மரபணுக் குறைபாட்டால் இந்த மக்கள் அனைவருக்கும் காலில் 2 விரல்கள் மட்டுமே இருப்பதால், இவர்களால் செருப்பு மற்றும் ஷீக்களை காலில் அணிய இயலாது.ஆனால், இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள்.

இவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள்.இவர்கள் இரட்டை காலுடன் பிறந்தாலும் அதனை வரவேற்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்துகொண்டால், இந்த இரட்டை விரல் மரபணு குலைந்துவிடும் என்பதால், இவர்கள் வேறு இன மக்களுடன் கலப்பதில்லை.

வறுமை கொண்ட இந்த நாட்டில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம். இதில் ஒரு கொடுமை என்னவென்றால், வெளிறிய நிறம் கொண்ட பெண்களுடன் உறவு கொண்டல் எய்ட்ஸ் நோய் தாக்காது. அல்லது எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறையும் என்பது இந்த மக்களின் நம்பிக்கை.இதன் காரணத்தினாலேயே எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.