வீதியின் குறுக்கே மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் முள்ளியவளை சேர்ந்த இருதயபாலன் ஜென்சி மேரிதாஸ் ( வயது -33),  ஆரியதாஸ் அமில்டன் (வயது – 21) என்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.

சிலாவத்தை பகுதியில் வீதி ஓரத்தில் நின்ற மரம் முறிந்து வீழ்ந்தபோது அவ்வீதியால் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சிக்குண்டன. அதில் நால்வர் பயணித்தனர். அவர்களில் இருவர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் முள்ளியவளை மாஞ்சோலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.