அடுத்த 12 மணிநேரத்திற்கு காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.