உங்கள் கை ரேகையில் இப்படி உள்ளதா…..?….. அப்படியானால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகப் போகிறீர்கள்……..!!

ஒருவர் ஜாதகத்தில் ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகத்தை உடையவர் கோடீஸ்வரர் ஆவது உறுதி என்று ஜோதிடம் கூறுகிறது.

கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும்?நடுவிரல், சனி விரல் என்று அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது.

விரலின் கீழ் காணப்படும் வட்டத்திற்கு சனி வளையம் என்று பெயர். ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்லும்.அதே சமயம் விதி ரேகை, கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நிற்கும் அல்லது சனி மேட்டில் முட்டி நிற்கும்.

இவ்வாறான கைரேகை அமைப்பு அனைவருக்கும் அமையாது. ஆனால், இப்படி உள்ளவர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.