பாரிய பணமோசடி -பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ரூபா .6.5 மில்லியன் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிஸார்.

கொன்வேவா, எப்பாவலவைச் சேர்ந்த சந்தேக நபர் ஹேரத் முதியன்செலேஜ் சமன் குமார ஹேரத் என அடையாளம் காணப்பட்டார்.

அனுராதபுரத்தில் மூன்று நபர்கள் பொலிசில் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து அவர் தேடப்பட்டு வருகிறார்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 025-2226014 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.