காமெடியன் வடிவேல் பாலாஜியின் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து அவரது நண்பர் அமுதவாணன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் “மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். யோசிக்கையில் படபடப்பாக இருக்கிறது.
அது இது எது 2 பண்ணலாம்னு பிளான் பண்ணியிருந்தோம்.
மேலும் அவருடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் பண்ண வித்தியாசமான டான்ஸ் வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்த சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மேலும் சோகத்தில் உள்ளனர்.