ஜேர்மனியில் இலங்கை இளைஞன் படைத்த சாதனை! நாமல் ராஜபக்ஷ வாழ்த்து

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் படைத்துள்ளார்.

செவ்வாய் கிழமை அன்று(08/09) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர் 100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார்.

யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.