கல்லூரி மாணவியால் ஏற்பட்ட பிரச்சினை: தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை உயிரோடு தீ வைத்து கொளுத்திய தாய்

கணவர் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் சென்றதால், தனது மகன்களுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லம்பக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்து(45). இவரது மனைவி ராதா(34) மற்றும் அபிஷேக்(13), அபிரித்(9) என்று இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்துள்ளனர்.

மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்வில் கல்லூரி மாணவி மூலம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முத்து கல்லூரி மாணவியுடன் பழகியநிலையில், இவரது மனைவி ராதாவிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் கணவரிடம் கேட்டதால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் முத்து கல்லூரி மாணவியுடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ராதா மகன்களுக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு பின்பு அவர்கள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்ற போது, அப்பொழுது ராதாவும் அப்ரீத்தும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் அபிஷேக்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவரும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு உயிரிழந்துள்ளார். தற்போது எஸ்கேப்பான ஜோடிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.