க.பொ.த சாதாரண தர கருத்தமர்வில் ரவுடிகளாக மாறிய கிளிநொச்சி மாணவர்கள்….ஒருவருக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவனின் கழுத்தில் வெட்டப்பட்டுள்ளது.

நேற்று கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின்போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 2600 வரையான மாணவர்கள் கூட்டுறவாளர் மண்டபத்திற்கு செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அந்த மண்டபத்திற்குள் சுமார் 1200 மாணவர்கள் மாத்திரமே அமர்ந்திருக்க முடியும். இதனால் ஆரம்பத்திலேயே சில மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட தொடங்கியது.

இதனையடுத்து ஒரு கட்டத்தில் மாணவர்கள் சிலர் அடிதடியில் ஈடுபட்டதுடன் கதிரைகளாலும் தாக்கிகொண்டனர்.

அதன்பின்னர் மண்டப வளாகத்திலிருந்து வௌியேறிய மாணவர்கள் வீதியிலும் மோதிக்கொண்டபோது, சில மாணவர்கள் கையில் பொல்லுகளுடன் அடிதடியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் போது ஒரு மாணவனின் கழுத்து சிறிய கத்தி ஒன்றினால் வெட்டுப்பட்ட நிலையில் காயங்களுக்குள்ளான மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.