100 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்ப ஆய்வுசாலை!-

விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை ஒன்று 100 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கலப்பு விதைகளை உருவாக்குவதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் மத்தியில் விநியோகித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

பேராதனை மற்றும் யாழ்.பல்கலைகழகங்களை கேந்திரமாக கொண்டு இந்த ஆய்வுசாலை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.