யாழ்.உடுப்பிட்டியில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு

யாழ்.உடுப்பிட்டி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில் கொங்கிறீட் துாண்கள் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவற்றை தோண்டியபோது உள்ளே பாரிய பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன்அங்குள்ள கொங்கிறீட் துாண் ஒன்றில் 1989ம் ஆண்டு கட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.