சிறுமியைக் கொன்று உடலை பையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட கொடூரம்!

ஹரியானாவில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரோத்தக் மாவட்டத்தில் டிட்டுலி (Tituli) கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 4 நாட்களாக காணவில்லை என பெற்றோர் முறைப்பாட்டினை அளித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறுமி குறித்து பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ஊரின் எல்லையில் உள்ள கழிவுநீரோடையில் பை ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிசார் சென்று பார்த்தனர்.

அங்கு மாயமானதாக கூறப்பட்ட சிறுமியின் உடல் பையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுமி கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.