பிரியாமல் ஒன்றாகவே இருந்த அண்ணன் தங்கை… நொடிப்பொழுதில் ஏற்பட்ட பாரிய சோகம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அளவுக்கதிமான பாசத்தினைக் கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல முடிவு செய்தார்கள்.

இதையடுத்து சடங்கு நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிய நிலையில், அண்ணன் ஆனந்தராஜ் இருசக்கர வாகனத்தினை தங்கை அபி பின்னே அமர்ந்து சென்றுள்ளனர்.

அத்தருணத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியரில் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆசையாகச் சடங்கு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்ற அண்ணனும், தங்கையும் ஒரே நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.