அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கும் போது ¸ இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும்¸ நல்லவர்களாகவும். கல்விமான்களாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லோரது மனதிலுமுள்ள ஆசையாகும். இதற்கான நல்ல பண்புகளையும்¸ பழக்க வழக்கங்களையும் இளமையிலிருந்தே வழங்குகின்ற பணியை¸ இந்து சமயத்தைப் பொறுத்தவரை அறநெறிப்பாடசாலைகள் செய்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதால் மாணவர்கள்¸ அறநெறிப்பாடசாலைகளை தவிர்த்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புனர்வாழ்வு¸ மீள் குடியேற்றம்¸ இந்து கலாசார அபிவிருத்தி¸ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார் .