தெரு முழுக்க போஸ்டர்….கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதி கல்பனா – ஸ்ரீகாந்த். இவர்கள் ராசிக்கல் விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ரித்தீஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரித்தீஷுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அன்னப்பூரணி என்பவரோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது வரதட்சணயாக கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் ரொக்கமாக பணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக ரித்தீஷ் வீட்டார் அன்னப்பூரணியிடம் மேலும் வரதட்சணை, வீடு, கார் முதலியவையும் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் அன்னப்பூரணி கோவித்துக்கொண்டு சென்னையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் திரும்பி வந்தால் வரதட்சணையோடு தான் வர வேண்டும் என தொடர்ந்து கணவர் வீட்டார் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளார் அன்னப்பூரணி,

அத்துடன் இதனை ஒரு போஸ்டராக அடித்து மாப்பிள்ளை வீடு மற்றும் தெரு முழுவதும் ஒட்டியுள்ளதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.