பாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி! யார் இவர் தெரியுமா?

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி.

அத்துடன் இவர் மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டவர்.

இவருடைய சிகிச்சை முறை மட்டுமல்லாது நோயாளிகளுடன் தனது உறவினர்கள் போல பழகுவது மட்டுமன்றி தான் செய்யும் மருத்துவ சிகிச்சை முறைகளை நோயாளிக்கு எடுத்தியம்புவார்.

இவர் கூறும் “அப்பன் ஒன்டும் பயப்படத்தேவையில்லை” என்ற ஒற்றை வாசகம் போதும் அனைத்து நோய்களும் ஒடிவிடும்.

மக்கள் நலனுக்காக சேவை செய்யும் இவர் போன்றவர்கள் எம்மவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.

அத்துடன் வைத்தியர் பாலசிங்கம் பாலகோபி தற்சமயம் கிளிநொச்சி வைத்திய சாலை நோயாளிகளையும் பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் வடமாகாணத்தின் கொடை இவர் தொடர்ந்து வட மாகாண மக்களுக்கு நீண்ட ஆயுளோடு பணியாற்ற இறைவன் துணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.