தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை! தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் நாளை நீதிமன்ற உத்தரவு மீறப்படாமல் திட்டமிட்டவாறு உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசிய கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்த நிலையில் சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காங்கேசன்துறைப் பொலிஸார் செய்யத மனுத் தாக்கலை அடுத்து அங்கு போராட்டம் நடத்த முடியாது என்று பருதித்துறை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியது.

இவ்வாறான அறிவிப்பு வெளியான நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் ஊடகங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவிக்கையில்,

நாளை திட்டமிட்ட படி போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்த போதிலும் எங்கு நடைபெறும் என்ற விடயத்தினை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.