4 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவரால் நேர்ந்த கொடூமை!

ஹம்பாந்தோட்ட, வலஸ்முல்ல பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற முதலாம் வகுப்பு மாணவிகள் நால்வரிடம் தவறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதான ஆசிரியர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக வகுப்பு சென்ற நிலையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், அது தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் குறித்த ஆசிரியரை கடுமையாக அடித்ததுடன், அந்தப் பகுதியில் கட்டிவைத்துள்ளனர்.

சந்தேக நபரான ஆசிரியரின் கையடக்க தொலைபேசியில், மாணவிடம் தவறாக நடந்துகொண்டது தொடர்பான காணொளிகள் சிலவற்றையும் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பெற்றோரினால் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார்.

ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.