‘ஸ்ரீலீக்ஸ்’ ஸ்ரீரெட்டி பாலியல் புகார்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார்.

அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்னணி செய்தி தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பாகுபலி வில்லன் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீரெட்டியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

இவர் தன்னை ஸ்டுடியோவில் வைத்து பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார் என ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.