4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்ன எஸ்பிபி: மரணத்தை முன்னரே கணித்தாரா?

மறைந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது.

பின்னணி பாடகர் எஸ்பிபி நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்த நிலையில் தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் கடந்த ஜூன் எஸ்பிபி மாதமே ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

அதன்படி, தனது பெற்றோர் சிலையை செய்து கொடுக்க ராஜ்குமாரிடம் முதலில் ஆர்டர் கொடுத்த எஸ்பிபி பின்னர் தனது சிலையையும் செய்து கொடுக்க சொல்லியிருக்கிறார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரில் வந்து தன்னால் போட்டோ ஷூட் தர முடியாது என சிற்பியிடம் கூறிய எஸ்பிபி தனது புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது சிலை தயாரான நிலையில் இந்த தகவலை சிற்பி ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவராக இருந்த எஸ்பிபி தனது மரணத்தை முன்பே கணித்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.