இராணுவம் விடுவித்த காணிகளில் எஞ்சியிருந்த உடமைகளும் திருட்டு!

வலி.வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட காணிகளிற்குள் காண உரிமையாளர்கள் போல் ஊடுருவிய சிலர் அக் காணிகளில் இருந்த பழைய இரும்புகளை எடுத்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

மக்கள் அப்பகுதியில் வசித்து வந்த வேளை பயன்படுத்தி இருப்புப் பொருட்கள் தற்போது பாவனைக்கு உதவாத நிலையில் காணிகளில் காணப்பட்டிருந்தது. குறிப்பாக பழைய ஊசிலி மிசின், கம்பி கேடர்கள், சேதமடைந்த ஏணி போன்றவை அங்கு காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு காணி உரிமையாளர்கள் போல் வந்தவர்கள் இவ்வாறு காணப்பட்ட பழைய இருப்பு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.